Total Pageviews

Tuesday, July 10, 2012

அருள்மிகு மரகதவல்லி சமேத நிரஞ்சீஸ்வரர்  திருக்கோவில், சின்ன ண்டலி.

திருச்சிற்றம்பலம் .

நமது அடுத்த உழவாரப்பணி நாள் : 29.07.2012 ஞாயிற்றுக்கிழமை








கோவில்:  அருள்மிகு மரகதவல்லி சமேத நிரஞ்சீஸ்வரர்  திருக்கோவில், சின்ன மண்டலி.   சிறு மணவை என்ற ஊரின் பெயர் மருவி தற்போது சின்ன மண்டலி என்று அழைக்கப்படுகிறது.




 பூந்தமல்லியிலிருந்து ஸ்ரீபெரும்பூதூர் செல்லும் வழியில், Emm Pee Distilleries அருகே வலது பக்கம் திரும்பி மப்பேடு வழியாக பேரம்பாக்கம் சென்று, பிறகு, அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் சின்னமண்டலி கிராமம்  உள்ளது.


பேருந்து வசதி : பூந்தமல்லியிலிருந்து 30 நிமிடத்திற்கு ஒரு பேருந்து பேரம்பாக்கம் செல்கிறது. Last bus at 8pm.
 30.08.2000 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 30.08.2012 ல் கும்பாபிஷேகம் நடத்த திருவருள் கூட்டியுள்ளது. அதற்கு கோவிலைத் தயார் செய்ய இந்த உழவாரப்பணி நடைபெறுகிறது.


28.07.2012 சனிக்கிழமை இரவு தங்குவதற்கு பேரம்பாக்கத்தில், மீனாட்சி ராமகிருஷ்ணன் கல்யாண மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்கு முன் சுமார் 300 மீட்டர் தொலைவில் மண்டபம்  அமைந்துள்ளது.


நமது குழு நண்பர்கள் கேள்விப்பட்டவரை இத் திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.   Maha Periyava has also worshipped at  this temple.  This place is associated with Manavai Munuswamy Mudaliar  who has authored நடராஜப் பத்து.

ஒரு வேண்டுகோள் :  மிகப் பழமையான இத் திருக்கோவில் பற்றிய பல விபரங்கள் காலப்போக்கில் மறைந்துள்ளன.  இந்த ஊர் மற்றும் கோவில் பற்றிய தகவல்கள் தெரிந்த அன்பர்கள் இருந்தால் எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறோம்.


திருச்சிற்றம்பலம் .

No comments:

Post a Comment